ஆயுஷ் மருத்துவர்களுக்கான நேரடி கடனுதவி ஆலோசனை மற்றும் குறு சிறு தொழில் பதிவு முகாம்
சிறிய அளவில் சித்தா கிளினிக் புற மருத்துவ சிகிச்சை அறை அமைப்பதற்காக மருத்துவ கல்வித்தகுதி அடிப்படையில் 20 லட்சம் வரை புரோபஷனல் கடன் உதவித் திட்டம் புதிதாக சித்த மருத்துவர்களாக தனியாக தயார் செய்யப்பட்டு TIIC துறை தலைமையகம் வசம் பரிந்துரைக்கப்பட்டு ஏப்ரல் முதல்வாரத்தில் செயல்படுத்தப்படும். CIBIL ஸ்கோர் 600க்கு மேல் உள்ளவர்களுக்கு கடனுதவி உடனே கிடைக்கும் வாய்ப்புள்ளது. இதன் மூலம் சித்த மருத்துவர்கள் எளிதாக கிளினிக் மற்றும் சிறிய மருத்துவமனைகளைத் துவக்கலாம்.
திரு ஆனந்தன், மண்டல மேலாளர், தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம், மதுரை
மதுரை மடீட்சியா ஆயுஷ் மருத்துவர்கள் தேவைகளுக்காக தனியாக தொழில்துறை அமைத்து பல்வேறு தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்கி வருகிறது. மடீட்சியாவில் வங்கிக்கடன் ஏற்றுமதி மருது செயல்களை அமைப்பதற்கான வரைமுறை திட்டம் ஆகியவற்றை ஏற்படுத்த ப்ராஜெக்ட் தயார் செய்து தர தனியாக தொழில் தகவல் மையம் செயல்படுகிறது. தமிழகம் முழுவதிலும் உள்ள ஆயுஷ் மருத்துவர்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளலாம்.
திரு முருகானந்தம், தலைவர், மடீட்சியா
சித்த மருத்துவர்கள் சிகிச்சை வழங்கும் சேவை அடிப்படையில் அல்லது மருந்துகள் தயார் செய்யும் உற்பத்தி அடிப்படையில் அல்லது இரண்டும் சேர்ந்த சேவை மற்றும் உற்பத்தி அடிப்படையில் கடனுக்கு விண்ணப்பிக்கலாம். தகுதி மற்றும் திரும்பச் செலுத்தும் தன்மை அடிப்படையில் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் கடன் வழங்குகிறது.
டாக்டர் ஜெ.ஜெயவெங்கடேஷ், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர், மதுரை
சித்தமருத்துவர் களுக்காக கடனுதவி வழங்க தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் தயாராக உள்ளது. சித்த மருத்துவர்களுக்கு சேவை மற்றும் உற்பத்தி கடனுதவி வழங்குவதில் மதுரை கிளை, தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் முன்னுதாரணமாக உள்ளது. சித்த மருத்துவர்கள் தங்களுக்கு தேவையான கருவிகள் மற்றும் மருந்துகளின் விலைப்பட்டியலை சமர்ப்பித்து விண்ணப்பம் செய்யலாம். நாங்கள் கேட்கும் தகவல்களை சொன்னால் போதும் நாங்களே விண்ணப்பம் நிரப்புவதற்கு ஆலோசனை தருகிறோம். புதிதாக ஒரு இடத்தில் சித்த மருத்துவமனை கட்டுவதற்கு இடம் வாங்குவதற்கும் கட்டிடம் கட்டுவதற்கு சிகிச்சைக்கு தேவையான உபகரணங்கள் வாங்குவதற்கும் என ஒரு முழுமையான சித்த மருத்துவ தொழில் வாய்ப்பிற்கு நாங்கள் நிதியுதவி வழங்குகிறோம்.
திரு கண்ணன், மதுரை கிளை மேலாளர் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம்
நாங்கள் கடன் வழங்கும் பொழுது மூன்று வகையான அளவீடுகளை பயன்படுத்துகிறோம். கடன் விண்ணப்பம் கோரும் விண்ணப்பதாரரின் மேலாண்மை திறன் (Managerial), நிதி பயன்பாட்டு திறன் (Financial) மற்றும் சேவை/ உற்பத்தி திறன் ( Service and Production Capacity) ஆகிய புள்ளிவிவரங்கள் அடிப்படையில் எவ்வளவு நிதி உதவி வழங்கலாம் என முடிவுசெய்து வழங்குகிறோம்.
திரு பாஸ்கரன் முதுநிலை மேலாளர், மதுரை கிளை, தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம்
புதிதாக தொழில் தொடங்க விரும்பும் மருத்துவர்கள் NEEDS மற்றும் Doctor scheme-ல் விண்ணப்பம் செய்யலாம். தங்கள் மருத்துவ பயிற்சிக்கு தேவையான எக்ஸ்ரே, லேப் அனலைசர் போன்றவற்றை வாங்குவதற்கும் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் நிதி உதவி வழங்குகிறது. பெண் தொழில் முனைவோர் களுக்காக சிறப்பு கடன் வசதி உண்டு. NEEDS திட்டத்தின் கீழ் விண்ணப்பிப்பவர்களுக்கு 25% சப்சிடி வழங்கப்படும். இந்த சப்சிடியானது கடனில் பிரின்ஸ்பலில் வரவு வைக்கப்படும். மேலும் சப்சிடி வழங்குவதற்கான நோடல் அலுவலகமாக தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் விளங்குவதால் சேவை மற்றும் உற்பத்தி இயந்திரங்களுக்கான சப்சிடி பெறும் வசதி உண்டு.
திருமதி பரமேஸ்வரி, திட்ட அலுவலர், தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம்
சித்த மருத்துவர்கள் மருத்துவம் சார்ந்த வங்கிக்கடன் உதவிக்காக திட்ட அறிக்கை தயார் செய்து கொடுக்கிறோம். சிறு குறு தொழில் பதிவு செய்வதற்கும் சேவை மையமாக செயல்படுகிறோம். நீங்கள் தயார் செய்த சித்த மருந்துகளை ஏற்றுமதி செய்வதற்காக ஏற்றுமதி கவுன்சிலில் பதிவு செய்து தருகிறோம். மருந்துகள் மட்டுமன்றி சுத்த மருந்துகளுக்கான உலர் பொருட்கள் வேர் பூ பட்டை ஆகிவற்றை ஏற்றுமதி செய்யவும், அதற்கான திட்ட அறிக்கை தயார் செய்யவும் உதவி செய்கிறோம். அதற்காக மிகக் குறைந்த அளவு கட்டணமே வசூலிக்கப்படுகிறது. தமிழ்நாடு தொழில் முதலீட்டு நிறுவனம் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மாலை 5 முதல் 6 மணி வரை எங்கள் சேவை மையத்தில் வாடிக்கையாளர்களுக்கு நிதியுதவி ஆலோசனை வழங்குகிறது. இதனை பாய்ஸ் மருத்துவர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். பிரதம மந்திரியின் நிதி உதவி திட்டத்தின் கீழ் நிதி உதவி பெறுவது எளிது. முதல் தொழில் முனைவோர், பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு விரைவில் கடன் உதவி வழங்கப்படுகிறது.
திரு அரங்கண்ணல், தொழில் சேவை மையம் மடீட்சியா, மதுரை
ஆயுஷ் மருத்துவர்கள் சிகிச்சை அளிப்பதில் மட்டுமே ஆர்வம் காட்டுகின்றனர். மருத்துவம் செய்வதை தவிர பல்வேறு தொழில் வாய்ப்புகள் உள்ளதை புரிந்து கொள்வதில்லை. உதாரணமாக மருந்து செய் நிலையம் அமைத்தல், உலர் மருந்துகளை சுத்தம் செய்து விற்பனை செய்தல், உலர் மருந்துகள் சேகரித்து பதப்படுத்துதல், மூலப்பொருட்களை அழைத்து கொடுத்தல், மூலப் பொருட்களில் இருந்து வேதி சத்துகளை பிரித்தெடுக்கும் எக்ஸ்டிராக்ட் தயார் செய்தல், சித்தா சோப்பு, ஹேர் ஆயில், முக களிம்பு, கண்மை போன்ற போன்ற சித்தா அழகு சாதன பொருட்களை தயார் செய்தல் ஆகிய பல்வேறு தொழில் வாய்ப்புகள் உள்ளன. அதற்கான எந்திர தளவாடங்களை நாங்கள் தயார் செய்து தருகிறோம். 5 லட்சம் ரூபாய் செலவில் புதிதாக சித்த மருந்து செய் நிலையம் அமைக்கலாம். அதற்கான திட்ட அறிக்கை தயார் செய்து உபகரணங்களையும் நாங்கள் வழங்குகிறோம். தொழில் தொடங்க இருக்கும் ஆயுஷ் மருத்துவர்கள் எங்களை எப்பொழுதும் அணுகலாம்.
டாக்டர் ராகவன், மேலாண்மை இயக்குனர்,
assi Equipments, Coimbatore
சித்த மருத்துவர்களுக்கு கடன் வழங்குவதற்கு முன்னோடியாக தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் விளங்குகிறது. நமது தேவைக்கு ஏற்றாற்போல் சிகிச்சைக்கு பயன்படும் கருவிகள் அல்லது மருந்து தயார் செய்ய பயன்படும் கருவிகளை மருத்துவர்கள் கடனுதவி மூலம் வாங்கலாம். இதற்கான சப்சிடியும் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் பெற்றுத் தருகிறது. மகிழ்ச்சி வாய்ஸ் மருத்துவர்களுக்கு பல்வேறு சந்தேகங்களை நிவர்த்தி செய்யவும், புதிய தொழில் செய்வதற்காக எப்படி நிதி உதவி தரலாம் என்பதற்காகவும் ஒரு களமாக அமைந்துள்ளது. ஏறத்தாழ 14 மாவட்டங்களில் இருந்து இந்நிகழ்ச்சிக்கு ஆயுஸ் மருத்துவர்கள் வந்துள்ளது பெருமை அளிக்கிறது. சித்தா ஆயுர்வேதா ஹோமியோபதி மற்றும் இயற்கை மருத்துவர்கள் ஒன்றிணைந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டது மனதுக்கு நிறைவைத் தருகிறது.
டாக்டர் சிறீதரன், உதவித் தலைவர், சித்தா கிளினிக் மற்றும் மருத்துவமனைகள் சங்கம்
ஆயுஷ் மருத்துவர்களுக்கு புதிய தொழில் வாய்ப்புக்கான முன்னோடி கருத்தரங்கம் ஆக இந்நிகழ்ச்சி அமைந்ததுடன் 100க்கும் மேற்பட்ட ஆயுஷ் மருத்துவர்கள் நேரிடையாக வந்திருந்து பலன் பெற்றனர். நிகழ்ச்சியில் திரளாக பங்கேற்ற சித்தா ஆயுர்வேதா ஹோமியோபதி யோகா நேச்சுரோபதி மருத்துவர்களுக்கு சித்தா கிளினிக் மற்றும் மருத்துவமனை சங்கம் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். சித்த மருத்துவர்களுக்கு வங்கிக் கடனுக்காக புதிய திட்டத்தை ஏப்ரல் முதல் வாரத்திற்குள் அமல் படுத்துவதாக உறுதி அளித்த தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் மற்றும் 2 மாதங்களுக்கு ஒரு முறை ஆயுஷ் தொழில் கருத்தரங்கம் நடத்த ஏற்பாடு செய்வதாக தெரிவித்த மதுரை மடீட்சியாவிற்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகள்.a
Welcome to Association of Siddha Hospital and Clinics
AUTHORISED TO SUE