+91 9444406997, 9003000250

ashacindia@gmail.com

  • Home
  • About Us
  • Gallery
  • Office Bearers
  • Member
  • Grievances
  • Application
    • Member Application
  • Trainings
  • Contact Us

பெறுநர்,
அனைத்து பத்திரிக்கைகள் மற்றும் தொலைக்காட்சி சேனல்கள்


பத்திரிக்கைகளுக்கு வேண்டுகோள்


சித்த மருத்துவமனைகள் மற்றும் கிளினிக் சங்கம் (Association of Siddha Hospitals And Clinics) மூலமாக அனைத்து பத்திரிக்கை நண்பர்களுக்கு சித்த மருத்துவ விழிப்புணர்ச்சிக்காக இந்த வேண்டுகோளை அளிக்கின்றோம்.
ஐந்தரை ஆண்டுகள் மருத்துவ பட்டப்படிப்பு படித்து இந்திய மருத்துவ கவுன்சிலில் அலோபதி மருத்துவர்களும், சித்த மருத்துவ கவுன்சிலில் சித்த மருத்துவர்களும், ஆயுர்வேதா, யுனானி மருத்துவ கவுன்சிலில் ஆயுர்வேதா, யுனானி மருத்துவர்களும், ஹோமியோபதி மருத்துவ கவுன்சிலில் ஹோமியோபதி மருத்துவகளும், இயற்கை மற்றும் யோக மருத்துவ கவுன்சிலில் இயற்கை மற்றும் அக்குபஞ்சர் மருத்துவர்களும் பதிவு செய்து தனித்தனியாக மருத்துவ பயிற்சி செய்து வருகின்றனர். ஆனால் போலி மருத்துவர்கள் யார் கைது செய்யப்பட்டாலும், “சித்த மருத்துவர் கைது” என்றே செய்தி வெளியிடப்படுகிறது.

தமிழ்நாடு சித்த மருத்துவ கவுன்சில் (TNSMC) சென்னை அல்லது மத்திய இந்திய மருத்துவ கவுன்சில் (CCIM) புதுதில்லியில் மருத்துவராக பதிவு செய்து சித்த மருத்துவ பயிற்சி செய்து வரும் பட்டதாரி சித்த மருத்துவர்கள் மீது புகார் எழும் பொழுது தமிழ்நாடு சித்த மருத்துவ கவுன்சில் மற்றும் மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் மேற்பார்வையில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. பதிவு பெறாத போலி மருத்துவர்கள் மேல் புகார் எழும் பொழுது சம்பந்தப்பட்ட காவல்துறை மற்றும் பொது சுகாதார துறையின் மூலமாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்நிலையில் ஊடகங்கள் மற்றும் எல்லா சேனல் செய்திகளிலும் “சித்த மருத்துவர் மேல் நடவடிக்கை” என்ற செய்தி வெளியிடப்படுகின்றன. இவ்வாறு வெளியிடப்படும் செய்திகள் பதிவு பெற்ற சித்த மருத்துவர் மேல் மக்களுக்கு ஒரு வித அவமதிப்பையும், சமூகத்தில் அவர்களின் நன்மதிப்பிற்கு பங்கத்தையும் ஏற்படுத்திவிடுகிறது.

ஆகவே தாங்கள் வெளியிடும் செய்திகளில் குறிப்பிடப்படும் மருத்துவர் பட்டதாரி சித்த மருத்துவர் என்றால் “சித்த மருத்துவர்” என்றும் இல்லாவிட்டால் “போலி மருத்துவர்” என்றும் செய்தி வெளியிடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
மேலும் சம்பந்தப்பட்டவர் உண்மையிலே பதிவு பெற்ற சித்த மருத்துவரா என்பதை அருகாமையில் உள்ள அரசு சித்த மருத்துவர் மூலமாக தெரிந்துக்கொள்ளலாம் என்பதையும் நாங்கள் பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறோம். தமிழ் மருத்துவமாம் சித்த மருத்துவ வளர்ச்சி மற்றும் நற்பெயருக்கு தங்கள் மேலான ஆதரவை விரும்புகிறோம்.


தங்கள் உண்மையுள்ள
Association of Siddha Hospitals And Clinics, Madurai



BUSINESS HOURS OF THE SOCIETY:
9.00 A.M. to 5.00 P.M.

Location:

27, Jaihindpuram I Street,
Madurai - 625011

Contact us:

Cell : +91 9003000250

Email : ashacindia@gmail.com

Visitors

Flag Counter

img

Association of Siddha Hospitals And Clinics

© 2024 Ashac . All Rights Reserved | Powered by