சிறந்த பேச்சாளரும், மரபு சார் உணவு ஆராய்ச்சியாளரும், எழுத்தாளரும், சித்த
மருத்துவரும், ஆரோக்கியா சித்த மருத்துவமனை தலைவரும், தமிழ்நாடு திட்டக்குழு ஆணைய உறுப்பினருமான மரு. கு.
சிவராமன் அவர்களை தெரியாதவர்கள் தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது.
பொதுமக்களால் கொண்டாடப்படும் அவர்
ஒரு பேச்சாளராக மட்டுமே அறிந்து கொள்ளப்பட்டவர். ஆனால் அதையும் தாண்டி மிகச்சிறந்த நிர்வாக திறன் உடையவர்
என்பது அவரின் பன்முகத் தன்மைக்கு உதாரணமாகும்.
22.08.2024 சேப்பாக்கத்தில் அமைந்துள்ள எழிலகத்தில் நடைபெற்ற சித்த மருத்துவ வளர்ச்சிக்கான சவால்கள் மற்றும்
அதனை எதிர்கொள்ளும் முறைகள் பற்றிய கூட்டரங்கு நடைபெற்றது. தனியார் சித்த மருத்துவமனைகள் சார்பாக டாக்டர்
ஜெ.ஜெயவெங்கடேஷ், பேராசிரியர் டாக்டர் பா. செந்தில் குமாரும் கலந்து கொண்டோம். மேலும் தமிழ்நாடு அரசு
மருத்துவர்கள், மருந்து செய் நிலையங்கள் சார்பாக டாக்டர் சிவகுமார், டாக்டர் வெற்றிவேந்தன், இம்ப்காப்ஸ்
சார்பாக அதன் தலைவர் டாக்டர் கண்ணன், சித்த மருத்துவ பேரியக்கம் சார்பாக டாக்டர் விஜய் விக்ரமன், அரசு சித்த
மருத்துவ அலுவலர் சங்கம் சார்பாக டாக்டர் சங்கர்ராஜ், டாக்டர் தமிழ்க்கனி, அபாஃக் போலி மருத்துவர்கள் ஒழிப்பு
குழுமம் சார்பாக டாக்டர் ஸ்ரீமுக நாகலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மாநிலத் திட்ட குழுவின் செயல்பாடும், உறுப்பினராக தனது பணியின் எல்லையை பற்றியும் மிகச்சிறப்பாக டாக்டர்
சிவராமன் அவர்கள் விளக்கினார். வேலையில்லா திண்டாட்டம், ஆள் பற்றாக்குறை, குறைவான சம்பளம், கூடுதல் பணி நேரம்,
அடிப்படை வசதிகள் இல்லாத பணியிடம், பதவி உயர்வில் காலதாமகம் ஆகிய பிரச்சினைகள் சித்த மருத்துவத் துறையில்
மட்டும் அல்லாமல் பல்வேறு துறைகளிலும் இருப்பதை முதலிலேயே சுட்டிக்காட்டினார். ஆகவே ஒவ்வொரு குறைகளாக
உறுப்பினர்களின் ஆலோசனையை கேட்டறிந்தார்.
மிக சிறந்த முறையில் ஆரோக்கியமாக விவாதம் நடத்தப்பட்டது. சித்த மருத்துவமனைகள் மற்றும் கிளினிக் சங்கம் சார்பாக கீழ்க்கண்ட குறைகள் சுட்டிக்காட்டப்பட்டன.
ஒவ்வொரு கோரிக்கைக்கும் அதன் தேவை, அதனை ஏற்படுத்துவதற்காக அரசுக்கு ஏற்படும் செலவு ஆகியவற்றை அப்பொழுதே
கணித்து இது சம்பந்தமாக எப்படி திட்ட அறிக்கையை தயார் செய்து அனுப்ப வேண்டும் என்பதை உடனே உடனே குழுவினரிடம்
மிகச் சிறப்பாக ஆலோசனை செய்தது டாக்டர் கு சிவராமனின் நிர்வாக திறமை பற்றிய மற்றொரு பக்கத்தை
எடுத்துக்காட்டியது. ஒருவர் இவ்வளவு பன்முகத் தன்மையுடன் இயங்க முடியுமா என்ற ஆச்சரியத்தையும், அவ்வாறு
இயங்குபவர் நமது சித்த மருத்துவர் என்ற பெருமையையும் ஏற்படுத்தியது. டாக்டர் சிவராமன் அவர்களின் ஆலோசனைப்படி
அயராமல் பணிகளை தொடருவோம்
சித்த மருத்துவமனைகள் மற்றும் கிளினிக் சங்கம், மதுரை
27, Jaihindpuram I Street,
Madurai - 625011
© 2024 Ashac . All Rights Reserved | Powered by